For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூர் ஏ.டி.எஸ்.பி. திடீர் மரணம் - தற்கொலையா?

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் மாவட்ட கலால் பிரிவு ஏ.டி.எஸ்.பி. சுதாகர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் கலால் பிரிவு ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் சுதாகர். இவருக்கு வயது 52. இவர் ஆம்பூர் அரசு விடுதி ஒன்றில் நேற்றிரவு தங்கினார்.

இன்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் அறை கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி பணியாளர் கதவை திறந்து பார்த்த போது சுதாகர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் வேலூர் மாவட்டம் கலால் ஏ.டி.எஸ்.பி. சுதாகர் உடலை அடுக்கும்பாறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ஏ.டி.எஸ்.பி. சுதாகர் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுதாகருக்கு ஒரு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X