தமிழர் படுகொலை வீடியோ: இந்தியா விசாரிக்கும்!- எஸ்எம் கிருஷ்ணா

இலங்கையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த போரில் சுமார் 3 லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். விடுதலைப் புலிகளை இனம் பிரிக்கிறோம் என்று கூறி அவர்களை தடுப்பு முகாம்களில் தங்க வைத்து சிங்கள அரசு கொடுமைப்படுத்தி வருகிறது.
முகாம்களில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவருமே விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகக் கண்ணோடு பார்க்கும் சிங்கள ராணுவத்தினர், அவர்களை கடத்திச் சென்று படுகொலை செய்வதாக புகார்கள் உள்ளன.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் சரணடைந்த விடுதலைப் புலிகள் பலரும் சுட்டுக் கொல்லபப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த மனிதப் பேரவலம் இப்போது வெளியில் தெரிய வந்துள்ளது.
பிரிட்டனின் 'சானல் 4' தொலைக்காட்சி இதனை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்களின் கண்களை கட்டி, நிர்வாணமாக்கி, ஒரு சிங்கள ராணுவ வீரர் ஈவு இரக்கமின்றி இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் காட்சியை அந்த டி.வி. சானல் நேற்று முன்தினம் ஒளிபரப்பியது.
சர்வதேச மீடியாவில் பெரும் விவாதத்துக்குரிய விஷயமாகியுள்ளது இந்தக் கொடிய நிகழ்வு.
ஆனால், இலங்கை அரசு இந்த காட்சிகள் போலியானவ என்று அறிவித்துள்ளது. சீனா ஆதரவு இருப்பதால், ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் இந்தியாவை ஏமாற்றி வரும் இலங்கை அரசு, இந்த விஷயத்திலும் உலக நாடுகளை திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து லண்டன் பிபிசி தொலைக்காட்சி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு கருத்து கேட்டது. அதற்கு எஸ்.எம். கிருஷ்ணா பதிலளிக்கையில்,
ஈழத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து இந்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. இது பற்றி முழுமையாக விசாரிக்கப்படும். இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர இலங்கையி்ல் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications