கிராமங்களை 'வலைக்குள்' இழுக்கும் ரிலையன்ஸ்!
சென்னை: கிராமங்களில் இன்டர்நெட் பயன்பாட்டை அதிகரிக்க முழுவீச்சில் களமிறங்குகிறது ரிலையன்ஸ் நிறுவனம்.
இதற்காக பாரத்நெட், கிராமீன் விஏஎஸ் மற்றும் எம்2எம் என மூன்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.
இந்த திட்டங்கள் மூலம் நாட்ட்ன் 5 லட்சம் கிராமங்களில் இணைய தள வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் திட்டமான பாரத் நெட் அதிவேக இன்டர்நெட் சேவையாகும். இத்திட்டத்தை 20 ஆயிரம் கிராமங்களில் அறிமுகப்படுத்தப் போகிறார்கள். இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் மற்றும் 100 நகரங்கள் தவிர்த்து ஏனைய கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 153 கேபிபிஎஸ் திறன் கொண்ட இத்திட்டத்துக்கான கட்டணம் வாரம் ரூ.98 ஆகும். இதில் 350 பிபிஎஸ் வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
கிராமீன் விஏஎஸ் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்குத் தேவையான செய்திகளை மொபைல்போன் மூலம் அளிக்கப் போகிறார்களாம். இதில் வாரச் சந்தை நிலவரம், வேளாண் விளைபொருள் நிலவரம், வானிலை உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் அந்தந்தப் பகுதி மொழியில் அளிக்கப்படும். இதற்கான மாதக் கட்டணம் ரூ. 15.
எம்2எம் திட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தகவல் தொகுப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு தகவல்கள் அளிக்கப்படும். இத்தகவல்களை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் மகேஷ் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications