மாஜி அமைச்சர் என்கேகேபி ராஜாவுக்கு பிடிவாரண்ட்
ஈரோடு: ஆள் கடத்தல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து, முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி ராஜா உள்ளிட்ட ஏழு பேருக்கு, பெருந்துறை நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை கல்லாங்குத்து தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி. இவரது மனைவி மலர்விழி, மகன் சிவபாலன், தம்பி குகமணி.
இவர்கள் நான்கு பேரும் கடந்த ஆண்டு சொத்துக்காக மர்ம நபர்கள் மூலம் கடத்தப்பட்டனர். இந்த கடத்தலுக்கு காரணம் என அப்போதைய, கைத்தறித்துறை அமைச்சர் ராஜா உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற தலையீட்டால், கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரனைக்கு மாற்றப்பட்டது. வழக்கின் முக்கிய சாட்சியான சிவபாலன், கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்தார்.
கடந்த ஜூலை 16 ம் தேதி, கர்நாடக மாநிலத்தில் சுற்றித்திரிந்த சிவபாலனை, சி.பி.சி.ஐ.டி போலீசார் மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சிவபாலன் மூன்று நாட்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, 27 பக்க ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் தன்னை மாஜி அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாதான் கடத்தினார் என்று வாக்கு மூலம் அளித்தார்.
இதனையடுத்து, மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஆள் கடத்தல், வீடு இடிப்பு, பழனிசாமியின் தந்தை சின்னசாமி இறந்தது, சிவபாலனை மீட்டுத் தரக்கோரி அவரது தாயார் கொடுத்த புகார் என, நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், ஆள் கடத்தல் மற்றும் வீடு இடிப்பு வழக்கை சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரிக்கின்றனர். மற்ற இரண்டு வழக்கையும் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக, பெருந்துறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், சி.பி.சி.ஐ.டி.போலீசார் கடந்த 11 ம் தேதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா உட்பட 30 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் என்.கே.கே.பி. ராஜா 14 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதை பெருந்துறை நீதிமன்றம் நேற்று முன்தினம் ஏற்றுக் கொண்டது.
இந்த வழக்கிகல் என்.கே.கே.பி. ராஜா உள்ளிட்ட ஏழு பேர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா, ஈரோடு மாவட்ட தி.மு.க. துணைத்தலைவர் விஸ்வநாதன், சுந்தரம், சுந்தர்ராஜன், சின்னப்பன், மணியக்காரர் குமார், பெருந்துறை சார்பதிவாளர் அன்பழகன் ஆகிய ஏழு பேரையும் கைது செய்யும்படி, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.
-
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
ஆள் பார்த்து போடுங்க.. இப்பவே உள்ளடி வேலை கையை மீறி போகுதே.. ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியுமா? -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
அடேங்கப்பா.. இது லிஸ்டுலேயே இல்லையே.. ஸ்டாலின் எடுத்த முடிவு.. மிக முக்கிய எம்எல்ஏவிற்கு நோ சீட்? -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்!












Click it and Unblock the Notifications