இன்போசிஸ் நாராயணமூர்த்தி மகளுக்கு நாளை கல்யாணம்
பெங்களூர்: இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்திக்கும், அவருடன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உடன் படித்தவரான ரிஷி சுனாக்-க்கும் நாளை பெங்களூரில் திருமணம் நடைபெறுகிறது.
குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொள்கின்றனர்.
நாராயணமூர்த்தியின் கல்யாணம் வெறும் 800 ரூபாய் செலவில்தான் நடந்ததாம். தனது தந்தையின் திருமணம் மிக எளிமையாக நடந்ததை மனதில் கொண்டு அக்சதாவும் தனது திருமணத்தை ஆடம்பரமாக நடத்த விரும்பவில்லையாம். இதனால் எளிமையான முறையில் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருமணத்தில் மொத்தம் 600 விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். ரிஷி, தற்போது ஒரு நிதி அறக்கட்டளை நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கிறார். அக்சதா கலிபோர்னியாவில் வெஞ்சர் கேபிடல் பிசினஸில் ஈடுபட்டுள்ளார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூரின் முக்கிய இடங்களில் ஒன்றான லீலா பாலஸில் நடைபெறுகிறது. அதில் இந்தியத் தொழில்துறையினர், ஐடி துறையினர் உள்ளிட்ட பல்துறையினர் கலந்து கொள்ளவுள்ளனர்.












Click it and Unblock the Notifications