For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் 14 பேருக்கு ஆபரேஷன் - கின்னஸ் சாதனைக்கு அனுப்பபப்பட மாட்டாது: அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News

Panneerselvam
சென்னை: மதுரையில் குறைந்த மணி நேரத்தில் 14 பேருக்கு மார்பக அறுவைச் சிசிச்சை நடந்தது டாக்டர்களின் திறமையைத்தான் காட்டுகிறது. இருப்பினும் இது கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர்உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகள் உயிர்காக்கும் உயர் கருவிகள் மற்றும் பிறவி உள் வளைந்த கால் ஊன சிறப்பு சிகிச்சை பயிற்சி மையத்தின் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மதுரை அரசு மருத்துவமனையில் 3 மணி நேரத்தில் 14 பெண்களுக்கு மார்பக அறுவைச் சிகிச்சை நடந்த விவகாரம் குறித்து அமைச்சர் கூறுகையில்,

மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில், 14 பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை தொடர்ந்து செய்யப்பட்டது. இது கின்னஸ் சாதனைக்காக நடத்தப்படவில்லை.

தனியாக ஒருவர் செய்தால் தான் கின்னஸ் சாதனை. ஆனால் 8 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளனர்.

அதிக அளவில் நோயாளிகள் இருந்ததால் இந்த அறுவை சிகிச்சை தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இது அரசு மருத்துவர்களின் திறமையை காட்டுகிறது. இது கின்னஸ் சாதனை அல்ல. இதை கின்னஸ் சாதனைக்கு மனு செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X