பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 99 ஆனது - புனேவில் ஒருவர் மரணம்
Subscribe to Oneindia Tamil
புனே: பன்றிக் காய்ச்சலுக்கு புனேவில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 99 ஆக உயர்ந்தது.
பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் இன்றுடன் இதுவரை 99 பேர் உயிரிழந்துள்ளனர்.
புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையான சசூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுனில் இஷார் என்ற 20 வயது வாலிபர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார்.
இவரையும் சேர்த்து புனேவில் இதுவரை 27 பேர் இறந்துள்ளனர். தேசிய அளவில் 99 பேராக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications