கோவையில் கொடூரம்- தண்ணீர் லாரி மோதி 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் இன்று காலை பஸ்ஸுக்காக காத்திருந்த கூட்டத்தினர் மீது தண்ணீர் லாரி பயங்கரமாக மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை சங்கனூர் மெயின் ரோட்டில் இன்று காலை இச்சம்பவம் நடந்தது. கண்ணப்பன் நகர் என்ற அந்த இடத்தில், படு வேகமாக ஒரு தண்ணீர் லாரி வந்தது.
சாலையோரம் இருந்த டீக்கடை அருகே பஸ்ஸுக்காக மக்கள் காத்திருந்தனர். அவர்கள் மீது படு வேகமாக லாரி மோதியது.
இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் ஒருவர் பெண், ஒரு குழந்தையும் அடக்கம்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தண்ணீர் லாரியின் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.












Click it and Unblock the Notifications