பகுஜன் சமாஜிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்த காளிமுத்து
Subscribe to Oneindia Tamil

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர் காளிமுத்து. ஜெயலலிதா ஆட்சியில் இவர் ஓரம் கட்டப்பட்டிருந்தார்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த காளிமுத்து பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று அவர் திடீரென தேமுதிகவில் இணைந்தார்.
கட்சித் தலைவர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து தன்னை தேமுதிகவில் காளிமுத்து இணைத்துக் கொண்டார்.
அவரை வரவேற்பதாக விஜயகாந்த் தெரிவித்தார். நிகழ்ச்சியின்போது அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications