ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 5 குடும்பங்கள்!
தர்மபுரி: தர்மபுரி அருகேகே பஞ்சாயத்துக் குடிநீர் இணைப்பு பெறுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஐந்து குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நூலஹள்ளி கிராமத்தை சேர்ந்த கோபால், அவரது மகன் கிருஷ்ணன், கோபால் தம்பி குப்புசாமி, குப்புசாமியின் மகன்கள் செந்தில், சிவக்குமார். அனைவரும் தத்தமது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோபால், அவரது தம்பி மகன் சிவக்குமார் ஆகியோர், தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் கொடுத்தனர்.
அதில்,
எங்கள் வீட்டிற்கு பஞ்சாயத்து குடிநீர் இணைப்பு பெறுவதில் தகராறு ஏற்பட்டது. இதில், ஊர் கவுண்டர் மற்றும் சிலர், கட்டப் பஞ்சாயத்து நடத்தி எங்கள் ஐந்து குடும்பங்களையும், ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
எங்கள் ஊரை சேர்ந்த யாரும் எங்களது நிலத்தில் வேலை பார்க்க வரக்கூடாது, சுக, துக்க நிகழ்ச்சிகள், கோவில் விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஊர் மக்களுக்கு விதித்துள்ளனர்.
இதனால், நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இது குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனு குறித்து உடனே விசாரணை நடத்த காவல்துறைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இன்னும் நாட்டாமை பட பாணியில் இருந்து வரும் இவர்களை என்னவென்று சொல்வது...?
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications