காகித ஆலை ஊழியர்கள் பணி நிரந்தரம்-கரூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் 1600 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி வரும் 4ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கரூர் காகிதபரத்தில் எம்ஜிஆர் காலத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் துவக்கப்பட்டது. கரும்பை மூலப்பொருளாக கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 100 கோடி லாபம் ஈட்டுகிறது. அன்னிய செலாவானியும் அதிகம் கிடைக்கிறது.
இங்கு தற்போது சுமார் 1,700 நிரந்தரத் தொழிலாளர்களும், 1,600 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். இருவரும் ஒரே வேலையை செய்தாலும் பாதி பேருக்கு அதிக சம்பளமும், பாதி பேருக்கு குறைந்த சம்பளமும் வழங்கப்படுகிறது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் மனதில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அவர்கள் திமுக அரசிடம் கோரிக்கை வைத்தும் எதுவும் நடக்கவில்லை. இந்த ஆண்டு நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டாக இருப்பதால் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய திமுக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இதற்காக மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் வரும் 4ம் தேதி மாலை 4 மணி அளவில் அந்த நிறுவனத்தின் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம் கழக கொள்கை பரப்புச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத்தலைவருமான தம்பிதுரை எம்.பி., தலைமையிலும், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச்செயலாளர் சின்னசாமி எம்எல்ஏ மற்றும் கரூர் மாவட்ட கழகச்செயலாளர் செந்தில்பாலாஜி எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி? அதிமுகவில் சேர்ந்ததும் எடப்பாடி போடும் கணக்கு.. பின்னணி -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
பச்சைக் கொடி காட்டிட்டாரா விஜய்? பவன் கல்யாண் சொன்ன "நீங்க பாதி.. ஆனாலும் யாருமே எதிர்பாராத சிக்கல் -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
Jayalalitha: "அஇபுதமமுக"! ஆமா, ஜெயலலிதாவின் பெயரை சசிகலா தவிர்த்தது ஏன்? இந்த 5 காரணங்கள்தானா? -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
Election Exclusive: எடப்பாடி தன்னை ஜெயலலிதாவாக உணர்கிறார்! மாஜிக்களின் உள்குத்து பாலிடிக்ஸால் அதிருப்தி! களத்தில் மகன்? -
“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications