கருணாநிதி இரங்கல் - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை
சென்னை: ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் மரணம் ஆந்திராவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தில் ஒரு நாள் அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி பள்ளி - கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளை வெள்ளிக்கிழமை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக டாக்டர் ரெட்டியின் மறைவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துக்கொண்டார்.
"டாக்டர் ராஜசேகர ரெட்டி தமிழக மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர்களுள் ஒருவர். அவரை இழந்து தவிக்கும் ஆந்திர மக்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசியலில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது ராஜசேகர ரெட்டியின் மறைவு" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications