ஸ்ரீரங்கம் மடத்தில் நகைகள் மாயம் - போலீஸில் புகார்
திருச்சி: ஸ்ரீரங்கம் ஜீயர் மடத்தில் விலையுயர்ந்த நகைகள் மாயமானதாக மடத்தின் முக்கிய நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பலகாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடம் உள்ளது. இதன் ஜீயர் புருஷோத்தம லட்சுமண ராமானுஜரை சிலர் கடத்தியதாக ஜீயரின் சீடர் கோவிந்த ராமானுஜ தாசர் போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து, சிபிசிஐடி போலீசார், கடந்த ஜூலை மாதம் திருச்சி ஜீயரை மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தன்னை யாரும் கடத்தவில்லை என்று கோர்ட்டில் ஜீயர் வாக்கு மூலம் அளித்தார்.
இந்த நிலையில், மடத்தில் விலை உயர்ந்த நகைகள், பொருட்கள் மாயமாகி விட்டதாக புகார் எழுந்தது.
இது குறித்து மடத்தின் சிஷ்யர்கள் சங்க செயல் தலைவர் சீமான் ஞானபிரான், காவல் துறையில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் மடத்தின் ஊழியர் பத்திரி நாராயண ராமானுஜ தாஸ், அவரது மனைவி ஜோதாராணி, மகன் அனந்தராமானுஜம் ஆகியோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.