Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனுஷ்கோடி கடலில் தவித்த இலங்கை தமிழ் அகதி மீட்பு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கையில் மீனவர்களால் இறக்கிவிடப்பட்டு நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த அகதி ஒருவர் தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்டார்.

இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்களை சித்ரவதை செய்து வருவதை அடுத்து, அங்குள்ள தமிழர்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக தமிழகத்துக்கு வருகின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பகுதி அரளிபட்டி என்னும் கிராமத்தில் வசித்து வந்த சிவகுமார் என்ற 33 வயது வாலிபர் ஒருவர் அப்பகுதியில் இருந்த மீனவர்களுக்கு ரூ. 40 ஆயிரம் கொடுத்து தமிழகத்துக்கு வர முயன்றுள்ளார்.

அவரை அழைத்து வந்த அந்த மீனவர்கள் தமிழக எல்லைப்பகுதியில் கடலில் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். தனுஷ்கோடி கடல் பகுதியில் தத்தளித்து கொண்டிருந்த அவரை பார்த்த தமிழக மீனவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அந்தத் தமிழர் பத்திரமாக மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டார்.

இதற்கிடையே, விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், செங்கல்பட்டு சிறப்பு முகாமிக்கு 16 இலங்கை அகதிகள், போலீஸ் விசாரணையில், அவர்களுக்கும், புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+