தமிழக அரசின் செஸ்னா, பெல் ஹெலிகாப்டர் பாதுகாப்பாக உள்ளன -அரசு
சென்னை: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து தமிழக அரிசன் வசம் உள்ள செஸ்னா விமானம் மற்றும் பெல் ஹெலிகாப்டரின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் இவை இரண்டும் மிகுந்த பாதுகாப்பான நிலையில், பறக்கும் தகுதியுடன் உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசிடம், செஸ்னா சிட்டேஷன் 5 விமானம் மற்றும் ஒரு பெல் ரக ஹெலிகாப்டர் உள்ளன. இவை இரண்டுமே கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அவர் பயணம் செய்வதற்காக வாங்கப்பட்டவை.
இவை இரண்டும் பத்திரமான நிலையில் இருப்பதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த இரண்டையும் பராமரித்து, பாதுகாக்கும் பணியை மேற்கொள்ள விமானப்படை அதிகாரி ஒருவர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குரூப் கேப்டன் அந்தஸ்திலான அதிகாரி ஆவார்.
இருப்பினும் 2006ம் ஆண்டு முதல் (அதாவது பதவியேற்றது முதல்) ஹெலிகாப்டரையோ அல்லது செஸ்னா விமானத்தையோ முதல்வர் கருணாநிதி பயன்படுத்தவில்லை.
வழக்கமான விமானங்களிலோ அல்லது ரயில் மூலமாகவோதான் அவர் பெரும்பாலான பயணங்களை மேற்கொள்கிறார் என்றார்.
மேலும், முதல்வர் பயணத்திற்கு முன்பாக அவர் பயணம் செய்யவிருக்கும் வாகனம் உரிய முறையில் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.












Click it and Unblock the Notifications