ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நால்வரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் உதவி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பலியான ஹெலிகாப்டர் விபத்தில் அவருடன் பயணித்து உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கும் ஆந்திர மாநில அரசு தலா ரூ. 10 லட்சம் நிவாரண உதவியை அறிவித்துள்ளது.
இன்று ஹைதராபாத்தில், இடைக்கால முதல்வர் ரோசய்யா தலைமையில் உயர் மட்டக் குழுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோசய்யா, ஹெலிகாப்டர் விபத்தில் முதல்வரின் முதன்மைச் செயலாளர் பி.சுப்பிரமணியம், தலைமை பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி, பைலட்டுகள் எஸ்.கே.பாட்டியா, எம்.எஸ்.ரெட்டி ஆகியோரும் பலியானார்கள்.
இவர்கள் 4 பேரின் குடும்பத்துக்கும் உடனடி நிதி உதவியாக தலா ரூ.10 லட்சம் வழங்க ஆந்திரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார் ரோசய்யா.












Click it and Unblock the Notifications