For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூர் காமலீலை பேராசிரியர் பணி நீக்கம்

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்: மாணவியை பாலியியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட வேலூர் பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் ஊரிசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வணிகவியல் படித்து வந்த ஜீவா என்ற மாணவி கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

சில நாட்களுக்கு முன் மாலை நேரத்தில் விடுதியில் தனியாக இருந்த ஜீவாவை விடுதிக் காப்பாளரான தமிழ்த்துறை பேராசிரியர் மணிவண்ண பாண்டியன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாக புகார் கொடுக்கப்பட்டது.

பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கல்லூரி முதல்வர் டேனியல் எழிலரசு, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் ஆகியோரிடம் ஜீவா புகார் செய்தார். அந்த புகார் மனுவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பிக்கு பரிந்துரை செய்தார்.

மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கல்லூரி வளாகத்தை அவர்கள் அடித்து சூறையாடினர்.

மாணவர்களின் போராட்டம் காரணமாக பேராசிரியர் மணிவண்ண பாண்டியன் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் வரும் 6ம் தேதி வரை கல்லூரி, விடுதிக்கு விடுமுறை அறிவித்தது.

இந்த நிலையில், பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி முதல்வர் டேனியல் எழிலரசு உத்தரவிட்டு்ள்ளார். மேலும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய கல்லூரி நிர்வாக குழு கூட்டம் இன்று நடக்கிறது.

இந்த நிலையில், பேராசிரியர் தனக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தை நாடினர். இதை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X