மும்பை தாக்குதல் விசாரணையை முடக்குகிறது பாக்.-சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

P Chidambaram
டெல்லி: மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கை பாகிஸ்தான் முடக்க பார்க்கிறது என உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நேற்று அல் ஜசீரா தொலைகாட்சிக்கு அவர் கொடுத்த பேட்டியில்,

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் பாகிஸ்தானுக்கு கொடுத்து விட்டோம். ஆனால், பாகிஸ்தான் இன்னும் குற்றவாளிகளை நீதிமன்றத்துக்கு கூட கொண்டு செல்லவில்லை.

அவர்கள் எங்கு விசாரணை நடத்தினார்கள்? அதற்கான குற்றப் பத்திரிகை எங்கே? எங்கே விசாரணையை துவக்கினார்கள்? முத்ல குற்றவாளி எப்போது விசாரணை செய்யப்பட்டார்? போன்று எந்த விவரங்கள் எதையும் எங்களுக்கு கொடுக்கவில்லை.

பாகிஸ்தான் அரசு இந்த விசாரணையை தடுத்து வைத்திருக்கிறது. இந்த வழக்கில் சையத் ஹபீசின் பங்கு என்ன?, அவர் யார் யாரை சந்தித்தார்?, அவர் என்ன உத்தரவுகளை பிறப்பித்தார்? இந்த ஆதாரங்கள வைத்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் வேறு எந்த ஆதாரத்தின் மூலம் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

கடந்த 2007 டிசம்பர் மற்றும் 2008 ஜனவரியில் கஸாப் மற்றும் தீவிரவாதிகள் இருந்த இடத்தில் தான் ஹபீஸ் இருந்திருக்கிறார். அவர் பல அந்த தீவிரவாதிகளுடன் பேசியிருக்கிறார். முசாபராபாத்தில் இருக்கும் மற்றொரு பயிற்சி முகாமுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவருடன் மேஜர் ஜெனரால் ஷாகத் என்பவரும் இருந்துள்ளார்.

அவர் தான் தீவிரவாதிகளுக்கு புது பெயர் வைத்துள்ளார். கஸாப்புக்கு அபு முகாஜித் என பெயர் சூட்டியுள்ளார். பின்னர் தீவிரவாதிகளுக்கு கப்பல் ஓட்டும் பயிற்சி அளிக்கப்பட்ட போதும் ஹபீஸ் உடனிருந்துள்ளார்.

இவை அனைத்தும் எங்கு நடந்தது, எந்த தேதி நடந்தது, அப்போது யார் யார் இருந்தார்கள் மற்றும் அவர்கள் என்ன பேசி கொண்டார்கள் உள்ளிட்ட அனைத்தையும் என்னால் கூற முடியும். பாகிஸ்தான் இருக்கும் விசாரணை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+