காஷ்மீருக்குள் சீன ராணுவம் அத்துமீறல்-சிவப்பு சாயம் பூசி அடாவடி
இந்தியா, சீனா இடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் லைன் ஆப் ஆக்சுவல் கன்ட்ரோல் என்ற எல்லை பகுதி வரையறுக்கப்பட்டது. இதன்படி ஜம்மு-காஷ்மீரின் தெற்கு பகுதியில் கியா மலைப் பகுதி தான் இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச எல்லையாக இருந்து வருகிறது.
சுமார் 22,420 அடி உயரத்தில் இருக்கும் இந்த மலைப் பகுதி ஹிமாச்சல பிரதேசத்தின் ஸ்பிட்டி, திபெத் மற்றும் காஷ்மீரின் லடாக் பகுதிகள் சேரும் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ஜுலு லாங் கணவாய் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவத்தினர் மலைப் பகுதிகளில் பாறைகள் மீது சிவப்பு வண்ணத்தில் மீது சீனா என்று எழுதியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய படையினர் இதைக் கண்டு அதிர்ந்தனர்.
இது போன்ற சிவப்பு சாயங்கள் இந்திய எல்லைக்குள் சுமார் 1.5 கிமீ. முதல் 1.7 கிமீ வரை எழுதப்பட்டிருப்பதாகவும், இந்த பகுதிக்குள் ஊடுருவிய சீன படையினர் தான் இந்த செயல் செய்திருப்பதகாவும் ராணுவ செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிரச்சனை குறித்து சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருப்பதாகவும், இது தொடர்பாக எதிர்ப்பைத் தெரிவிக்க மூன்று தளபதிகளை பீஜிங மற்றும் லாசாவுக்கு அனுப்பியிருப்பதாகவும் தெரிகிறது.
சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்துக்குள் சீன ஹெலிகாப்டர்கள் இரண்டு அத்துமீறி நுழைந்தது. இதை தொடர்ந்து தற்போது அந்நாட்டு ராணுவம் சிவப்பு சாயம் அடித்திருப்பது இரு நாட்டுக்கும் இடையிலான உறவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருணாசலப் பிரதேசம் எங்களுடையது என்று சீனா கூறி வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது அதன் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதும் நடந்து வருகிறது.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!













Click it and Unblock the Notifications