மத்திய அரசின் இந்தித் திணிப்பு- இளந்தமிழர் இயக்கம் கண்டனம்
சென்னை: இந்திய அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டில் வேற்று இனத்தவரை பணியில் அமர்த்தி தமிழ் இனத்தின் தாயகமான தமிழ்நாட்டை, கலப்பினத்தவர்கள் வாழும் மாநிலமாக மாற்றும் செயல்திட்டத்தை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. இதைக் கண்டித்தும் சென்னை ரயில் நிலையத்தில் தமிழில் விண்ணப்பம் கொடுத்த பெண்ணிடம் இந்தி ஊழியர்கள் முறைகேடாக நடந்து கொண்டதைக் கண்டித்தும் தமிழ் ஆர்வலர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப் போவதாக இளந்தமிழர் இயக்கம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி வெளியிட்டுள்ள அறிக்கை...
மயிலாப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் கடந்த 25.08.09 அன்று மயிலாப்பூரைச் சேர்ந்த இலட்சுமி என்பவர் தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு நிலையத்தில் தமிழில் முன்பதிவுச் சீட்டு பூர்த்தி செய்து கொடுத்துள்ளார்.
அவ்விண்ணப்பத்தை அங்கிருந்த வடநாட்டைச் சேர்ந்த ஊழியர் விண்ணப்பம் தமிழில் இருப்பதைக் கண்டு, விண்ணப்பத்தை தூக்கி விசிறியெறிந்துள்ளார். இதனால் இலட்சுமி அவமானம் அடைந்தார். இலட்சுமி மற்றும் அவரது கணவர் மூர்த்தி ஆகியோர் மயிலாப்பூர் தொடர்வண்டி நிலைய முன்பதிவு மேற்பார்வை அலுவலர் இளங்கோவன் என்பவரிடம் முறையிட்டு புகார் செய்ய முயன்றனர்.
அப்போது அங்கிருந்த இந்தி ஊழியர்கள் 4 பேர் சேர்ந்து கொண்டு இனவெறியுடன் இலட்சுமியையும் அவரது கணவரையும் தாக்க முயன்றுள்ளனர். இதனை அங்கிருந்த மேலாளரும் கண்டித்துள்ளார்.
இதையடுத்து 5ம் தேதி பிற்பகல் 12 மணியளவில் இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி தலைமையில் இளந்தமிழர் இயக்கத் தோழர்கள் மயிலாப்பூர் தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு நிலையத்திற்கு சென்றனர். அங்கிருந்த மேற்பார்வையாளர் அலுவலகத்தைத் திடீர் முற்றுகையிட்டு நடந்த நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இலட்சுமியின் புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கேட்டனர். ஆனால், நிர்வாகத் தரப்பு இன வெறியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
மயிலாப்பூரில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்நாட்டின் தேசிய மொழியான தமிழ் மொழி அறியாத வடமாநிலத்தவர்களும், மலையாளிகளும் பெரும் எண்ணிக்கையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்திய அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டில் இவ்வாறு வேற்று இனத்தவரை பணியில் அமர்த்தி தமிழ் இனத்தின் தாயகமான தமிழ்நாட்டை, கலப்பினத்தவர்கள் வாழும் மாநிலமாக மாற்றும் செயல்திட்டத்தை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.
கடந்த வாரம் சென்னையில் நடத்தப்பட்ட நடுவண் அறிவியல் மற்றும் தொழில்துறை தொடர்பான ஆராய்ச்சி(சி.எஸ்.ஆர்.) நிறுவனத்திற்கான தேர்வில் 20 கட்டாய இந்தி வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு மாணவர்கள் இக்கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாதால் பணிக்கும் தேர்வு பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான, இந்திய அரசின் தொடர்ச்சியான இந்தித் திணிப்புப் போக்கை இளந்தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
1956-இல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களைத் தகர்க்கும் விதமாக வேற்று மாநிலத்தவரை தமிழ்நாட்டில் வேண்டுமென்றேக் குடியேற்றம் செய்கிறது இந்திய அரசு.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் நடுவண் அரசு அலுவலகங்களின் பணியிடங்களை, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புத் துறை அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும்.
இக்கோரிக்கையை முன்வைத்தும், இலட்சுமி அவர்களின் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளையும், தமிழ் உணர்வாளர்களையும் திரட்டி போராட்டங்கள் நடத்துவோம் என்று எச்சரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications