புதிய நீதிக் கட்சியின் பெயர்-கொடி மாற்றம்
சென்னை: புதிய நீதி கட்சியின் பெயர் நீதிக் கட்சி என்று மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
பல்வேறு காரணங்களால் இன்று கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 10 லட்சமாக குறைந்துவிட்டது. கட்சிக்கு உத்வேகம் ஊட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியின் பெயரை மாற்ற பொதுகுழு முடிவு செய்தது.
இதனால் புதிய நீதிக்கட்சி என்னும் கட்சியின் பெயரை நீதிக் கட்சி என பெயர் மாற்றம் செய்துள்ளோம். மேலும், புதிய நீதிக் கட்சியின் கொடியில் தற்போதுள்ள கருப்பு, மஞ்சள் மற்றும் சிகப்பு என்கின்ற நிறங்களின் மாற்றப்படவுள்ளது. புதிய கொடியில் கருப்புக்கும், மஞ்சளுக்கு இடையில் ஆரஞ்சு சேர்க்கப்படும்.
தமிழ் நாடு முழுவதும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகள் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா, அண்ணா நூற்றாண்டு நாள் நிறைவு விழா மற்றும் கட்சியின் 10ம் ஆண்டு துவக்க விழா ஆகிய மூன்று விழாக்களையும் ஒன்றினைத்து முப்பெரும் விழா நடை உள்ளது.
இந்த விழாவில், மாவட்டம் தோறும் சைக்கிள் பேரணிகள் நடைபெறும் என்றார் ஏசி சண்முகம்.












Click it and Unblock the Notifications