யுஏஇ: பன்றி்க் காய்ச்சலுக்கு இந்தியப் பெண் பலி
அதில், 27 வயதான தீப்தியின் கணவர் கோபிநாத் அங்கு அல் அய்ன் நகரில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த தீப்திக்கு பன்றி காய்ச்சல் நோய் தாக்கியது. அதே நேரத்தில் அவருக்கு பிரசவ வலியும் எடுத்துள்ளது.
இதையடுத்து அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குறைபிரசவத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்திலே அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவருக்கு சுவாச கருவிகள் பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் குழந்தையின் முகத்தை பார்க்கும் முன்னதாகவே மரணமடைந்துவிட்டார். அவரது உடல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக ஷார்ஜாவில் இருந்து இந்தியா கொண்டு அனுப்பப்பட்டுள்ளது என அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
துபாயில் ஸ்வைன் விழிப்புணர்வு முகாம்:
இந் நிலையில் யுஏஇ நாட்டில் இருக்கும் தொழிலாளர்கள் மத்தியில் பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் பல்வேறு மையங்களை சேர்ந்த தொழிலாளர் முகாம் நிர்வாகிகளுக்கு பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் அஸ்கான், எச்ஆர்எம், மெல்கோ, ஸ்டார் இன்டர்நேஷனலை சேர்ந்த 24 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முகாம் ஹிந்தி மற்றும் தமிழில் நடத்தப்பட்டது.
பிரைம் மெடிக்கல் மையத்தை சேர்ந்த டாக்டர் காலித் ஹுசைன் ஸ்வைன் மருத்துவ அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து உரையாற்றினார்.













Click it and Unblock the Notifications