ஜியாவை கொன்றது அமெரிக்கா-கூறுகிறார் மாஜி ஐஎஸ்ஐ தலைவர்

இதுதொடர்பாக பாகிஸ்தான் டிவி ஒன்றுக்கு இம்தியாஸ் அளித்துள்ள பேட்டி...
ஜியா உல் ஹக்கைக் கொல்ல பாகிஸ்தானைச் சேர்ந்த சிலருடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டது. அந்த பாகிஸ்தான் சக்திகள், அரசியல் அதிகாரத்தை ஜியாவிடமிருந்து பறிக்க விருப்பம் கொண்டிருந்தவை ஆகும். இவர்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.
ஜியா உல் ஹக் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகவில்லை, அது சதி வேலை என்று முன்னாள் ராணுவ தளபதி மிர்ஸா ஆலம் பேக்கும் கூறியுள்ளார் என்று கூறியுள்ளார் இம்தியாஸ்.
1977ம் ஆண்டு ஜூல்பிகர் அலி பூட்டோ ஆட்சியைக் கவிழ்த்து விட்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தார் அப்போதைய ராணுவ தளபதியான ஜியா உல் ஹக். நாட்டில் ராணுவச் சட்டத்தையும் பிரகடனம் செய்தார்.
முதலில் ராணுவ சர்வாதிகாரியாக செயல்பட்டு வந்த அவர் பின்னர் 1978ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னை நாட்டின் ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டார்.
1988ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜியா உல் ஹக் விமான விபத்தில் உயிரிழந்தார். அது அப்போதே சதி வேலை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் ஜியா உல் ஹக்கை அமெரிக்காதான் கொன்றது என்று புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இம்தியாஸ் அகமது.
இதுகுறித்து ஜியாவின் மகன் இஜாஸ் உல் ஹக் கருத்து தெரிவிக்கையில், விமான விபத்து குறித்து முழுமையான கிரிமினல் புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
முன்னாள் பைலட் அக்ரம் அவான் என்பவர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டபோது, விசாரணையின்போது, ஜியா சென்ற விமானத்தை தகர்க்க இஸ்ரேலின் மொசாத் உபகரணங்களைக் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார். இதுகுறித்து முறையாக விசாரிக்கப்படவில்லை.
விமான விபத்து குறித்த விசாரணையை நடத்த விடாமல் அமெரிக்கா தடுத்து விட்டது. எனது தந்தையின் உடலில் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்களை தொலை தூரங்களுக்கு மாற்றி விட்டனர்.
விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கரை சந்தித்தேன். ஆனால் அவரிடமிருந்து எந்தப் பதிலும் இதுவரை இல்லை.
எனது தந்தையின் மரணத்தில் இன்னும் நிலவி வரும் பல மர்மங்களை அவிழ்க்க விரிவான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் இஜாஸ் உல் ஹக்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications