நெல்லை-ஒரே நாளில் 5 பேர் தற்கொலை
நெல்லை: நெல்லை மாவட்த்தில் நேற்று நடந்த ஐந்து வெவ்வேறு சம்பவங்களில் குடும்ப தகராறு, நோய் உள்ளிட்ட காரணங்களுக்காக 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மானூர் வடக்கு தெருவை சேர்ந்த வனராஜ் மகன் சவுந்தர். இவர் மாறாந்தையில் உள்ள தனியார் ஐடிஐயில் 2ம் ஆண்டு படித்து வந்தார். ஓழுங்காக ஐடிஐக்கு செல்லாதததை அடுத்து அவரை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சவுந்தர் பக்கத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாளையங்கோட்டை கீழநத்தம் கீழுரை சேர்ந்தவர் கண்ணையா. நீரழிவு நோயினால் அவதிப்பட்டு வந்த இவருக்கு உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், வெளியில் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வேதனையடைந்த அவர் நேற்று விஷம் குடித்து பலியானார்.
நாங்குநேரி அருகே மாங்குளத்தை சேர்ந்தவர் சேர்மன். விவசாயி. வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் நேற்று விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் நெல்லை அரசு மருத்துவ க்ல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மூலக்கரைபட்டி அருகேயுள்ள சிலயத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவர் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முன்னீர்பள்ளம அருகேயுள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி பாப்பாத்தி. இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றில் கட்டி இருந்து வந்தது. இதனால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று வீட்டில் தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த 5 சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.