வரதட்சணை-மனைவியை கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி

ஆனால் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், இதுதொடர்பாக ஏற்கனவே குடும்ப நல கோர்ட்டை விவாகரத்துக்காக அணுகியிருப்பதாகவும் அந்தப் பெண்ணின் கணவர் கூறியுள்ளார்.
இந்தப் புகார் குறித்து சென்னை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, முத்தமிழ் நகர், வடக்கு அவென்யூ சாலையில் வசித்து வருபவர் சர்மிளா. கரூர் வைசியா வங்கியில் உதவி மேலாளராக இருக்கிறார்.
இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், என் கணவர் சாமுவேல். ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். ஜம்மு - காஷ்மீர் மாநிலப் பிரிவின் கீழ் வரும் ஐ.பி.எஸ் அதிகாரி.
எனது கணவர் கிறிஸ்தவ யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர். நான் இந்து யாதவா சமூகத்தைச் சேர்ந்தவர்.
எங்களுக்கு கடந்த பிப்ரவரி 2ம் தேதி சுயமரியாதை முறையில் திருமணம் நடந்தது. எழும்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் முதலிரவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நள்ளிரவில் போதையுடன் அறைக்கு வந்தார் சாமுவேல். பின்னர் ஆபாசமாக பேசியபடி, என்னையும், என் குடும்பத்தாரையும், கேவலமாக பேசினார்.
பின்னர் பிப்ரவரி 14ம் தேதி எனது கணவருடன் காஷ்மீர் சென்றேன். அங்கும் என்னை அடித்து உதைத்தார். எனது குடும்பத்தினரை கேவலமாகப் பேசினார்.
மேலும், எனது கணவர், போனில் யாரிடமோ, ஒரு பெண்ணை கொலை செய்து அதை விபத்தாக மாற்றி விடுவதாக பேசிக் கொண்டிருந்தார். அதை நான் கேட்டு பயந்து போனேன். என்னை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார் என்ற பயம் வந்து விட்டது.
சென்னையில் உள்ள என் குடும்பத்தாரை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளி விடுவதாக மிரட்டினார். ஒரு மனநோயாளி போல் என்னிடம் நடந்து கொண்டார்.
கடும் குளிர்பிரதேசமான காஷ்மீரில், படுக்கையில் இருந்த என்னை நள்ளிரவில் கீழே தள்ளி விட்டு சித்திரவதை செய்தார். கடும் குளிரால் எனக்கு காய்ச்சல்வ ந்து விட்டது. ஆனால் சிகிச்சை பெறக் கூட அவர் அனுமதிக்கவில்லை.
இரவு நேரத்தில் வீட்டின் பால்கனியில் பல மணி நேரம் என்னை நிற்க வைத்து கொடுமைப்படுத்துவார்.
இதற்கிடையே, நான் சென்னைக்கு திரும்பினேன். என் பெற்றோரிடம், வரதட்சணை அதிகமாக வேண்டும் என கேட்டு மிரட்டினார்.
மதுரையில் உள்ள போலீஸ் கமிஷனர், மற்றும் சில அரசியல் பிரமுகர்கள், தன் குடும்பத்தினருக்கு நெருக்கம் என கூறி மிரட்டினார். என்னை ஏமாற்றி மோசடியாக திருமணம் செய்து, என் நகைகளை அபகரித்துக்கொண்ட அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்தப் புகாரை ஆணையர் அலுவலகம், குடும்ப நல வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.
சர்மிளா புகார் கொடுத்ததை அறிந்ததும் சாமுவேல் சென்னை மத்திய குற்றப் பிரிவு உயர் அதிகாரிகளை அணுகி தனது தரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
அதில், எனது மனைவி சர்மிளா, பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார். எனது மனைவிக்கு இன்னொருவருடன் கள்ளத் தொடர்பு உள்ளது. அதை மறைக்கத்தான் இவ்வாறு நாடகமாடியுள்ளார்.
மனைவியை விவாகரத்து செய்ய, குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். நீதிபதியின் முடிவுக்கு கட்டுப்படுவேன். என் மீதான புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்ளவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார் சாமுவேல்.
இந்த விவகாரம் குறித்து மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில், சாமுவேல், 1999ம் ஆண்டு நேரடியாக தேர்வான ஐ.பி.எஸ்., அதிகாரி என தெரிய வந்துள்ளது.
அவரது மனைவி சர்மிளா கொடுத்துள்ள புகார், மத்திய குற்றப்பிரிவில் உள்ள வரதட்சணை தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
புகார் கொடுத்த சர்மிளாவை அழைத்து விசாரிக்க, அப்பிரிவின் உதவி கமிஷனர் விமலாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாமுவேலிடமும் விசாரிக்க வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சாமுவேல், ஜம்முவில் நடந்ததைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இப்பிரச்னை விசாரணை அளவிலேயே உள்ளது. இருவரிடமும் விசாரிக்க வேண்டும். கோர்ட்டில் வழக்கு உள்ளதால், கோர்ட் முடிவை பொறுத்து வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.
காவல் நிலையத்தி்ல விசாரணை...
இந்த நிலையில் ஆயிரம் விளக்கில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சாமுவேலும், சர்மிளாவும் இன்று வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
முதலில் தனித் தனியாகவும், பின்னர் இருவரும் சேர்த்து வைத்தும் விசாரிக்கப்பட்டனர்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications