சென்னைக்கு 15ல் கிருஷ்ணா நீர் திறப்பு-ஆந்திரா
சென்னை: சென்னைக்கு வரும் 15ம் தேதி கிருஷ்ணா நீர் திறந்துவிடப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
ஸ்ரீசைலம் நீர்தேக்க திட்டத்தின் ஒரு பகுதியாக தெலுங்கு கங்கா கால்வாய் தி்ட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி சென்னையில் இருக்கும் பூண்டி நீர் தேக்கத்துக்கு ஆந்திர அரசு ஆண்டுதோறும் 5 டிஎம்சி நீர் கொடுத்து வருகிறது.
இந்த நீர் சுமார் 408 கிமீ., தூரம் கடந்து சென்னை வருகிறது.
தற்போது ஸ்ரீசைலம் அணை நிரம்பிவிட்டது. ஆனால், கண்டலேறு அணையில் 22 டிஎம்சி நீர் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சமீபத்தில் சென்னை குடிநீர் திறந்துவிட வேண்டும் என ஆந்திர அரசை கேட்டு கொண்டது.
இதையடுத்து ஆந்திராவின் தற்காலிக முதல்வர் ரோசய்யா தலைமையில் உயர் குழு கூட்டம் இன்று ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கண்டலேறு நீர்தேக்க பகுதியில் இருந்து சென்னைக்கு நீரை திறந்துவிடுமாறு ரோசய்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆந்திர பாசனத்துறை அமைச்சர் லட்சுமைய்யா கூறுகையில்,
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ளோம். மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திர அரசுகளுக்கு இடையே கிருஷ்ணா நதி தொடர்பாக போடப்பட்டுள்ள ஒப்பந்தப்படி சென்னைக்கு 15 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட வேண்டும். இதில் ஆந்திராவின் பங்கு 5 டிஎம்சி மட்டுமே.
வரும் 15ம் தேதி இந்த நீர் திறந்துவிடப்படும். கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் இரண்டு அல்லது மூன்று தவணைகளில் கொடுக்கப்படும் என்றார்.
-
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை












Click it and Unblock the Notifications