தகவல் அறியும் சட்டம் பயன்பாடு-தமிழகம் முதலிடம்
திருப்பூர்: தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதில் நாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மாநில தகவல் கமிஷனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் உரிமை சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட 20 மனுக்கள் குறித்து மாநில தகவல் கமிஷனர் பெருமாள்சாமி விசாரணை நடத்தினார்.
பின்பு, அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த 2006 ஜனவரி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை தமிழகத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 600 மனுக்கள் தகவல் உரிமை சட்டத்தில் பெறப்பட்டுள்ளன. இதில் 86 ஆயிரத்து 300 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, அந்தந்த துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
22 ஆயிரத்து 500 மனுக்கள் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இவை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வராதவை ஆகும்.
வெளிப்படையான அரசு நிர்வாகம், ஊழல் ஒழிப்பு, அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொள்வதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு இந்த சட்டம் உத்தரவாதம் தருகிறது. அரசு ரகசியங்கள் தொடர்பான சில துறைகளுக்கு, இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நபரின் உயிர், உடல், உடைமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விளக்கங்கள், வியாபார ரீதியான ரகசியங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகம், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு, தமிழர்களிடையே உள்ள விழிப்புணர்வே காரணம்.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேவையான தகவல் பெற, வெள்ளை பேப்பர் போதும். அதில், அத்துறையின் பொது தகவல் அதிகாரியின் முகவரியிட்டு, ரூ. 10 நீதிமன்ற முத்திரை ஒட்டி, அனுப்பினால் போதும்.
கருவூலத்தில் செலுத்தப்பட்ட சலான், டிடி ஆகியவற்றையும் கொடுக்கலாம். மேல்முறையீடு செய்ய, ஏற்கனவே செய்த மனுவின் ஜெராக்ஸ் இணைத்து விண்ணப்பிக்கலாம் என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications