For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

9 ஆண்டுகளில் 125 பெண்களை கற்பழித்த கொடூரன்

By Staff
Google Oneindia Tamil News

சியோல்: தென் கொரியாவில் 9 ஆண்டுகளில் 125 பெண்களை 200 முறை கற்பழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவனை போலீஸார் கைது செய்தனர்.

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள பாஜூ பகுதியில் வசித்து வருபவன் ஜா. 39 வயதான அந்த நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் பொருட்களை டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறான்.

டெலிவரி செல்லும் இடங்களில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி கற்பழித்துள்ளான். மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளான்.

இதையடுத்து அவன் மீது 125 பெண்களை 200 முறை கற்பழித்ததாக போலீஸில் புகார் சுமாத்தப்பட்டுள்ளது. அதில் சில பெண்களை அவன் பல முறை கற்பழித்துள்ளான்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2009 வரையிலான 9 ஆண்டு காலத்தில் நடந்துள்ளது.

இதையடுத்து கியாங்கி மாகாண போலீஸார் அவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் அவனது முகம் டிவியில் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தை வைத்து போலீசார் நேற்று அவனை கைது செய்தனர்.

இவனுக்கு கடந்த 2001ல் திருமணமாகியது. அவனது குழந்தை தற்போது ஆரம்ப பள்ளியில் படித்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X