விஜய் தொண்டராக இருந்தாலே போதும்-இளங்கோவன்
ஈரோடு: நடிகர் விஜய் காங்கிரசின் அடிமட்டத் தொண்டராக இருக்க வேண்டியதில்லை, தொண்டராக இருந்தாலே போதும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இன்று அனைத்து அரசியல் கட்சிகளிலும் இளைஞர்கள் 10 சதவீதம் பேர் தான் உள்ளனர். 90 சதவீதம் இளைஞர்கள், அரசியலே வேண்டாம் என்று தான் நினைக்கின்றனர்.
ராகுல் காந்தி வருகைக்கு பின், தமிழகத்தில் நிறைய இளைஞர்கள் அரசியலுக்கு வருவார்கள் .
நடிகர் விஜய் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம். அவர் காங்கிரசில் இணைய எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அவர் அடிமட்ட தொண்டராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தொண்டராக இருந்தால் போதும்.
என் மகன் மேஜர், அவரும் காங்கிரசில் தான் உள்ளார். தேர்தலில் நிற்பதா, வேண்டாமா என்பதை அவர் தான் முடிவு செய்வார். ராகுல் சுற்றுப் பயணத்துக்கு பின் என் மாமூல் அரசியல் தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications