முதுகுளத்தூரில் பதட்டம்: பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை-போலீஸ் குவிப்பு
கமுதி: முதுகுளத்தூரில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே உள்ள முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள வீரம்பல் கிராமத்தினருக்கும், அருகில் இருக்கும் மற்றொரு கிராமத்தில் வசிக்கும் சமூகத்தினருக்கும் நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இதனால் இந்த இரு சமூகத்தை சேர்ந்தவர்களும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டி வந்தனர். இந்நிலையில் வீரம்பல்லை சேர்ந்த போஸ் என்பவரின் மகன் அறிவழகன் (25) அங்குள்ள பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, அறிவழகனை சராமரியாக வெட்டி சாய்த்தது. பின்னர் அங்கிருந்து தலைமறைவாகியது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அறிவழகன் மதுரை அரசு மருத்துவமனையி்ல சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து முதுகுளத்தூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் ஓடவில்லை. இந்த பிரச்சனையை அடுத்து முதுகுளத்தூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி, ஐஜி, டிஐஜி ஆகியோர் நிலைமையை நேரில் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, பரமக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications