6 மாத குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற மனநிலை பாதித்த தாய்
நெல்லை: நெல்லை அருகே 6 மாத கைக் குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்தார் மனநிலை பாதிக்கப்பட்ட தாய்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடக்கன்குளம் லுத்தர் மிஷன் தெருவை சேர்ந்தவர் ஜோன்ரோஸ். அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஜெனிபர். இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட ஜெனிபர் தனது தாய் தேவியின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை மேரி கடைக்கு சென்றுவிட்டார். அப்போது தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை தூக்கிய ஜெனிபர் அதை சுவற்றில் ஓங்கி அடித்தார். இதில் அந்தக் குழந்தை அலறியடி மயங்கிது. குழந்தையின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் ஜெனிபரிடம் இருந்து குழந்தையை மீட்டு வடக்கன்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தது.
இதையடுத்து போலீஸ்க்கு தெரியாமல் அந்த குழந்தையின் உடலை அடக்கம் செய்ய முயன்றனர். இது குறித்து பெருங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால் போலீஸ்க்கு தகவல் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.