எஸ்.எம்.எஸ். தொல்லை-புகார் கூறிய ஷீபாவைக் குறி வைத்த எஸ்.ஐ.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஹக்கீம் என்ற பிரியாணிக் கடை அதிபர், ஷீபா என்ற பெண்ணுடன் கள்ளக் காதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது ஷீபாவின் கணவர் ராபினுக்குத் தெரிய வந்ததும், அவர் மனைவியைக் கண்டித்தாராம். இதையடுத்து ஷீபா கள்ளக் காதலை கைவிட்டதாக தெரிகிறது.
ஆனாலும் ஷீபாவை மறக்க முடியாத ஹக்கீம், தொடர்ந்து ஷீபாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வந்துள்ளார். ஆனால் ஷீபா வர மறுத்து விட்டதாக தெரிகிறது.
இருந்தாலும் தொடர்ந்து ஹக்கீம் எஸ்.எம்.எஸ்.களாக அனுப்பி வந்ததால் கோபமடைந்த ஷீபா இதை தனது கணவரிடம் கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த ராபின் தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து ஹக்கீமை கடத்திச் சென்று சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் ஹக்கீம் உயிரிழந்து போனார்.
இதையடுத்து உடலை அரக்கோணம் கொண்டு போய் ரயில்வே டிராக்கில் போட்டு விட்டு வந்து விட்டனர்.
இந்த நிலையி்ல் ஹக்கீம் கடத்தப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தியதில் ஷீபா, ராபின் மற்றும் ராபினின் நண்பரான சத்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் விசாரணையின்போது, ஒரு சப் இன்ஸ்பெக்டர்தான ஹக்கீமை கடத்திச் சென்று மிரட்ட ஐடியா கொடுத்ததாக தகவல் கிடைத்தது.
ஹக்கீமின் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காக ஷீபாவும், ராபினும், இந்த சப் இன்ஸ்பெக்டரை அணுகியுள்ளனர். அப்போது ஷீபாவைப் பார்த்த சப் இன்ஸ்பெக்டருக்கு அவர் மீது ஆசை வந்து விட்டது. அவரை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.
சப் இன்ஸ்பெக்டரின் ஆதரவோடுதான் ஹக்கீம் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடத்தி மிரட்டுவதோடு ராபின் மற்றும் குழுவினர் நின்று விடுவார்கள் என நினைத்திருந்தார் சப் இன்ஸ்பெக்டர். ஆனால் அவர்களை மூர்க்கமாக அடித்துக் கொலை செய்து விட்டதால் சப் இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியாகி விட்டாராம்.
ஷீபா விவகாரத்தில் சப் இன்ஸ்பெக்டரின் தலையீடு எந்த அளவுக்கு இருந்தது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.