For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்தாண்டு முதல் 1,6ம் வகுப்புகளுக்கு சமச்சீ்ர் கல்வி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புக்களுக்கு சமச்சீர் கல்வி முறை அமலுக்கு வருகிறது.

சமச்சீர் கல்வி முறைக்கான பாடத்திட்டம் மற்றும் புத்தகம் தயாரிப்பதற்கான ஆலோசனை கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அத் துறையின் உயர் அதிகாரிகளின் கூட்டம் கோட்டையில் நடந்தது. இதில் திட்டக் குழுத் துணைத் தலைவர் நாகநாதனும் பங்கேற்றார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய தென்னரசு,

2010ம் ஆண்டு முதல் சமச்சீர் கல்வி அமலுக்கு வருகிறது. இதற்கான பாடத்திட்டம், புத்தகம் தயாரிப்பதற்காக குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

அக்டோபர் மாதத்தில் இதற்கான பாடத்திட்டம் உருவாகும். இந்த வரைவு பாடத் திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் தவிர்த்த அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி முறையான கருத்துக்களை கேட்டறிவத என முடிவெடு்க்கப்பட்டுள்ளது.

அந்த கருத்துக்களின் அடிப்படையில் டிசம்பர் மாதத்தில் 1வது மற்றும் 6வது வகுப்புக்கான புத்தகங்கள் தயாரிக்கும் பணி முடிவடையும். ஜனவரி மாதம் புத்தகம் அச்சிடும் பணி தொடங்கும்.

1 மற்றும் 6ம் வகுப்புக்கான சமச்சீர் கல்வி புதிய பாடப் புத்தகமங்கள் 2010 ஜூன் முதல் வாரத்தில் எல்லா பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுவிடும்.

இதையடுத்து படிப்படியாக மற்ற வகுப்புக்களுக்கான புதிய பாடத் திட்டங்களும் வகுக்கப்பட்டு அமலாக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X