கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகை அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக கால்நடை மருத்துவ மாணவர்களுக்கான உதவித் தொகை (ஸ்டைபன்ட்) அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடப் படிப்பின் கடைசி செமஸ்டரில் இருக்கும் ஆறு மாத கால பயிற்சியின்போது தற்போது மாதம் ரூ. 1650 உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இதை ரூ. 3000 ஆக அரசு உயர்த்தியுள்ளது.
உதவித் தொகையை உயர்த்தக் கோரி கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தனர். தங்களது உதவித் தொகையை ரூ. 7000 ஆக அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் ரூ. 3000 ஆக உதவித் தொகை உயர்த்தப்படுவதாக ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications