ரூ. 2.5 கோடி-சென்னை நிறுவனத்துக்கு திருப்பி தர கேரள போலீசுக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

புனலூர்: கேரளாவில் நிலம் வாங்க சென்ற சென்னை நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து கடந்தாண்டு பறிக்கப்பட்ட ரூ. 2.5 கோடி பணத்தை மீண்டும் அவர்களிடம் திருப்பி கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008 ஆகஸ்ட் மாதம் சென்னையை சேர்ந்த ஆம்கோ பிராப்பர்டிஸ் லிமிட் என்ற தனியார் நிறுவனத்தின் தலைவர்சந்திரசேகரன், ஜார்ஜ், அம்பிகாவதி ஆகியோர் கேரளாவில் புனலூர் அருகே எடமண் பகுதியில் 10.70 ஏக்கர் ரப்பர் தோட்டத்தை வாங்க காரில் சென்றனர்.

அவர்கள் ஆரியங்காவுக்கு அருகில் சென்றுகொண்டிருந்த போது போலீசார் வண்டியை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது போலீசார் அவர்கள் நிலம் வாங்க வைத்திருந்த ரூ. 2.5 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் புனலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த பணம் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது என்பதும், அதற்கு முறையாக வரி கட்டப்பட்டிருப்பதும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றம் அந்த பணத்தை நிறுவனத்தின் தலைவர் சந்திரசேரனிடம் கொடுக்க உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+