தீபாவளி-தசரா-ரமலான்: தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்-யுஎஸ் எச்சரிக்கை
அந் நாட்டு வெளியுறவுத்துறை அமெரிக்கர்களுக்கு வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவி்த்துள்ளது.
இந்த கொண்டாட்டங்களின்போது இந்தியாவுக்குச் சென்றால் மிக எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்கர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்த செப்டம்பர் 11ம் தேதியைத் தொடர்ந்து இந்தப் பண்டிக்கைகள் வருவதால் அமெரிக்கர்கள் இந்தியாவில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ள வெளியுறவுத்துறை, கடந்த ஆண்டு மும்பையில் நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த தாக்குதல்களையும் சுட்டிக் காட்டியுள்ளது.
ஹோட்டல்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவை தீவிரவாதிகளின் முக்கிய குறியாகும். எனவே அந்த இடங்களில் எச்சரிக்கையுடன் இருங்கள். பாதுகாப்பு உள்ள இடங்களுக்கு மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நீங்கள் அமெரிக்கர்கள் என்பதை அதிகமாக வெளியில் காட்டிக் கொள்ளாதீர்கள் என்றும் அதில் யோசனை கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 30ம் தேதி வரை இந்த எச்சரிக்கை அமலில் இருக்கும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.