லஷ்கர்-இ-தொய்பாவுக்கு இந்திய இயக்கங்கள் உதவி-ப.சிதம்பரம்

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பிய அவர் இன்று அனைத்து மாநில போலீஸ் தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பின் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எல்லை தாண்டி நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல் இந்தியாவுக்கு கவலை தருவதாக இருக்கிறது. தீவிரவாதத்தை பார்த்து கொண்டு சும்மா இருக்கமாட்டோம். அதை ஒரு போதும் பொறுத்து கொள்ளமாட்டோம்.
தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க தேவையான பயிற்சிகள் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எங்காவது தீவிரவாத தாக்குதல் நடந்தால் தற்போது அதை நம்மால் எளிதாக முறியடிக்க முடியும்.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் இந்தியா மீது தாக்குதல் நடந்தும் திட்டத்தில் இருக்கின்றன. அவர்கள் தாக்குதல் நடத்த புதிய வழிகளை கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.
அவர்களுக்கு இந்தியாவில் இருக்கும் சில அதிருப்தி இயக்கங்களும் உதவி வருகின்றன. இதன்மூலம் இந்த அன்னிய தாக்குதலுக்கு அவர்கள் இந்திய முகம் கொடுக்க பார்க்கிறார்கள்.
பாதுகாப்பு நிறுவனங்கள் கடந்த ஆண்டு 12 தீவிரவாத இயக்கங்களை அடையாளம் கண்டுள்ளன. இந்த ஆண்டு முதல் ஆறு மாதத்தில் 13 அமைப்புகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.
90 சதவீத வன்முறைக்கு மாவோயிஸ்ட் காரணம்...
குடியரசு- ஜனநாயக நாட்டில் ஆயுதம் ஏந்திய போராட்டம் என்பதற்கே இடமில்லை.
ஆனால், இடதுசாரி தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்தியாவில் 17 மாநிலங்களில் இருக்கும் இவர்கள் தான் 90 சதவீத வன்முறைக்கு காரணமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களது செயல்பாடுகளை விரிவாக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.
அவர்கள் தங்களது தாக்குதல் திட்டம் மற்றும் ஆயுத பிரிவை வளர்த்து கொண்டுள்ளனர். போலீஸ் தாக்கிய வந்த அவர்கள் தற்போது ரயில், பாலம், மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு இணைப்புகளை துண்டித்து வருகின்றனர். இவர்களால் நாட்டின் முன்னேற்றம் தடைபடுகிறது.
காஷ்மீர் பகுதியில் தற்போது பாதுகாப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இருந்தாலும் சில பகுதிகளில் குறைபாடுகள் இருப்பதாக எச்சரிக்கை தரப்பட்டுள்ளது என்றார் சிதம்பரம்.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
சம்பளம் கட், பள்ளிகளுக்கு விடுமுறை, வாகனத்தை இயக்கவே தடை.. ஈரான் போரால் திண்டாடும் பாகிஸ்தான் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ












Click it and Unblock the Notifications