விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம்-சிபிஐ எம்எல்ஏ உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆலங்குடி சிபிஐ எம்எல்ஏ ராஜசேகரன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார்.
அவர் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு போதிய அளவு மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி இந்த போராட்டத்தை துவக்கியுள்ளார்.
அவர் இதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆலங்குடி தாலுகா அலுவலகம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார்.
மேலும், விவசாயிகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், தொடர்ந்து 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவருடன் விவசாயிகள் பலரும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications