சென்னை-விஷவாயு தாக்கி 2 பணியாளர்கள் பலி
சென்னை: சென்னையில் கிணற்றில் தூர்வார சென்ற இரண்டு துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியானார்கள்.
இந்த சம்பவம் ஜெ.ஜெ. நகரில் உள்ள கலைவாணர் நகர் பகுதியில் ந்டந்துள்ளது.
இங்குள்ள தனியாருக்கு சொந்தமான கிணறு ஒன்றில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் கிணற்றில் இருந்து எதிர்பாராத விதமாக விஷவாயு வெளியானதை அடுத்து வேலையில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளிகள் பரிதாபமாக இறந்துள்ளனர்.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஷவாயு தாக்கி பலியாகும் சம்பவங்களில் பெரும்பாலும் பாதாள சாக்கடைகளை சுத்தப்படுத்தும் தொழிலாளர்கள் தான் பலியாகி வருகின்றனர். அரிதாக இது போன்ற பாழும் கிணறுகளை சுத்தப்படுத்துபவர்களும் பலியாகி வருகின்றனர்.
இதையடுத்து இந்த மாத துவக்கத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இதை தடுக்க என்ன வழிகள் என்பதை ஆராய 13 பேர் கொண்ட குழுவை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.