இத்தாலியில் நிலநடுக்கம்-4.2 ரிக்டராக பதிவு
ரோம்: இத்தாலியில் நேற்று இரவு சுமார் 10.04 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.2 ரிக்டராக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இத்தாலியி்ன் மத்திய பகுதியான டஸ்கேனியில் ஏற்பட்டுள்ளது. புளோரன்ஸ் நகருக்கு வடகிழக்கே சுமார் 30 கிமீ தொலைவில் இது மையமிட்டதாக இத்தாலியின் புவியியல் மற்றும் எரிமலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் உடனடியாக தெரியவில்லை.
ஆனால், பீதி காரணமாக போர்கோ சான் லோரன்ஷோ, ஸ்கார்பரியா, பார்பெரினோ நகரங்களில் மக்கள் பீதியடைந்து தெருக்களில் ஓட்டம் பிடித்ததாகவும், இதில் சிலருக்கு அடிபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
வீடுகளுக்குள் நுழைய பயந்து சிலர் தங்களது கார்களை பெட்ரூம் ஆக்கி கொண்டதாகவும் தெரிகிறது. இந்த நிலநடுக்கத்தை புளோரன்ஸ், போலக்னோ நகர மக்களும் உணர்ந்துள்ளனர்.
கடந்த ஏப்ரலில் இங்கு ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தில் சுமார் 300 பேர் வரை பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications