உண்மையைச் சொன்னால் உயிருக்கே உத்தரவாதமில்லை- சந்திரிகா

Subscribe to Oneindia Tamil

Chandrika
இலங்கையில் எனது கட்சிதான் ஆட்சியில் உள்ளது... ஆனாலும் அங்கே சுதந்திரமாக கருத்து வெளியிட்டால் எனது உயிருக்கே கூட உத்தரவாதமில்லாத நிலைதான் உள்ளது என அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார் சந்திரிகா. நேற்று கேரள மாநிலம் சென்ற கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தனை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறுகையில், பொதுவாகவே இலங்கையில் ஒரு அச்சநிலை காணப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்போது அமைதியான நிலை ஒன்று காணப்படுவதாகத் தெரிவித்த சந்திரிகா குமாரதுங்க, இருந்தபோதிலும் 'வேறு வகை' அச்சுறுத்தல்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

"அடிப்படை உரிமைகள் அங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஊடகங்கள் அடக்கப்பட்டுள்ளன. நியாயமான, சட்டரீதியான விமர்சனங்களை முன்வைத்தமைக்காக கடந்த இரண்டு வருட காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளார்கள். இதை என்னால் இலங்கையில் சொல்லக்கூட முடியாத நிலை. இத்தனைக்கும் எனது கட்சிதான் ஆட்சியில் உள்ளது. மீறி சொன்னால் என் உயிருக்கே கூட உத்தரவாதமில்லை" என்றார் சந்திரிகா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+