பிஎஸ்பியி to பாஜகவுக்கு தாவிய சேத்தன் சர்மா
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பjrதாபாத் தொகுதியில் நின்று தோல்வியை சந்தித்தார்.
இந் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் 'சோஷியல் என்ஜினியரிங்' தோல்வியைடந்துவிட்டது என்று கூறி பாஜகவில் சேர்ந்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் இவர் சேர்ந்திருப்பதால் கட்சியின் பலம் கூடியிருப்பதாக பாஜக தொண்டர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து சேத்தன் சர்மா நிருபர்களிடம் கூறுகையில், ஹரியானா மாநில பாஜக தலைவர் கிருஷ்ணா பால் குஜ்ஜார் முன்னிலையில் பரிதாபாத்தில் நடந்த விழாவில் அக்கட்சியில் சேர்ந்துள்ளேன்.
வரும் சட்டசபை தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிட மாட்டேன். எனக்கு டிக்கெட் கொடுத்துவிட்டால், கட்சியின் உண்மையான தொண்டர் ஒருவருக்கு டிக்கெட் கிடைக்காமல் போய்விடும். ஆனால், பிரசாரத்தில் முழுவீச்சில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்.
பகுஜன் சமாஜ் கட்சியில் சட்டசபை வேட்பாளர் டிக்கெட்டை விற்று வருகின்றனர். கட்சியில் ஊழல் மிகுந்துவிட்டது.
அந்த கட்சியால் பிராமணர்கள் அதிகம் பாதிக்கப்ப்டடு வருகின்றனர். இதனால் சோஷியல் என்ஜினியரிங் தோற்றுவிட்டது. அது சுரண்டல் என்ஜினியரிங் ஆக மாறிவிட்டது என்றார்.