அக். 7ல் உள்ளாட்சி தேர்தல்-வேட்புமனு தாக்கல் துவங்கம்
சென்னை: தமிழகத்தில் காலியாக இருக்கும் 603 இடங்களுக்கு அடுத்த மாதம் 7ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவி்ததுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு துவங்கியது. இது வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
24ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 26ம் தேதி மனுக்களை வாபஸ் பெறலாம். வாக்குப்பதிவு 7ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 9ம் தேதியும் நடக்கிறது.
தமிழகத்தில் 506 ஊரக உள்ளாட்சிகள் மற்றும் 97 நகர்புற உள்ளாட்சி பணியிடங்கள் என மொத்தம் 603 இடங்களுக்கு இந்த தேர்த்ல நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி நகராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர் மற்றும் மானூர் ஊராட்சி ஓன்றியத்தில் ஒரு வார்டு உறுப்பினர், சங்கரன்கோவில் ஓன்றியம் செந்தட்டியாபுரம் ஊராட்சி தலைவர் மற்றும் 10 கிராம பஞ்சாயத்துகளில் 11 உறுப்பினர்கள் என மொத்தம் 14 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 23 இடங்கள் காலியாகவுள்ளன.












Click it and Unblock the Notifications