திருச்சி சிறையில் கைதிகள் மோதல்!
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் கைதிகள் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவக்கு மண்டை உடைந்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் வீரமணி (38) மற்றும் திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த பிரபல ரவுடி சந்திரமௌலி (32) என்ற அந்த இரண்டு கைதிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர்.
இவர்கள் இருவரும் சிறையில் உள்ள டவர் பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு நேரத்தில் வீரமணிக்கும், சந்திரமௌலிவுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் பயங்கர மோதலாக மாறியது.
இதில் இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி தாக்கினர். இதை கேள்விப்பட்ட போலீஸார் அவர்களை விலக்கிவிட்டனர். இந்த சம்பவத்தில் வீரமணிக்கு மண்டை உடைந்தது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்திரமெளலியை போலீஸார் தனி அறையில் அடைத்தனர்












Click it and Unblock the Notifications