வாடகை வீடு-கூடுதல் மின் கட்டணம் இணைப்பு துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வீடுகளில் குடியிருப்போரிடம் வீட்டு உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்பட பல நகரங்களில் வாடகை வீட்டில் வசிப்பவர்களிடம் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.5 அல்லது ரூ.6 வரை வசூலித்து வருகின்றனர்.
இது ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் கொடுமையாகும்.
இவ்வாறு கூடுதல் மின் கட்டணம் வசூலித்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications