புகார் கொடுத்த நபருக்கு அடி-உதை: இன்ஸ்பெக்டருக்கு சம்மன்
மதுரை: காரைக்குடியில், ஒரு வழக்கு சம்பந்தமாக புகார் தந்த நபரையே காவல் நிலையத்தில் அடைத்து வைத்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார் என்பவரை நேரில் ஆஜராகும்படி, மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சிவில் சப்ளை குடோனை சேர்ந்தவர் மாரிமுத்து. பில் கலெக்டர். இவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது
நான், வேலாயூரணியை சேர்ந்த பாலு என்பவரிடம் 17 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அதற்கு, வங்கி செக், புராமிசரி நோட் எழுதி கொடுத்தேன்.
கடனுக்காக, 10 சதவீத வட்டி செலுத்தினேன். கடனை முழுமையாக செலுத்திய பிறகும், வங்கி செக், புராமிசரி நோட்டுகளை தர பாலு மறுக்கிறார். கூடுதல் வட்டி கேட்டும், எனது வீட்டை அவருக்கு விற்கும்படியும் மிரட்டி வருகிறார்.
கூடுதல் வட்டி கொடுக்காவிட்டால், வேறு ஒருவர் மூலம், கோர்ட்டில் என் மீது செக் மோசடி வழக்கு பதிவு செய்ய போவதாகவும் பாலு மிரட்டுகிறார்.
இது குறித்து, தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் கிளை உத்தரவிட்டும், என் புகாரை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரிக்கவில்லை.
இதன் பிறகு, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். என் புகார் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர், புகாரை வாபஸ் பெறும்படி என்னை மிரட்டி வருகிறார். விசாரணைக்காக சென்ற என்னையும், சாட்சிகள் செந்தூர்பாண்டி, பாண்டியையும் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் சிறை வைத்தார்.
அவர் என் புகாரை தொடர்ந்து விசாரித்தால், உண்மை வெளிவராது. எனவே, எனது புகாரை, வேறு புலனாய்வு பிரிவினர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை, செப்டம்பர் 30 ம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications