ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்
நெல்லை: சங்கரன்கோவில் அருகே அனுமதியில்லாமல் பதுக்கிய 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
தீபாவளி பண்டிகையின் போது வெடி விபத்துகளை தவிர்க்க முறைப்படி அனுமதி பெற்ற கடைகளில் மட்டுமே பட்டாசு விற்க வேண்டும் என்றும், குடோனில் சேமித்து வைக்க தனியாக அனுமதி பெற வேண்டும் என்றும், அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆனால் இதை மீறி எவ்வித அனுமதியும் இல்லாமல் பல பகுதிகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்நது நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன் அனுமதி இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நெல்லை மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் மேற்பார்வையில் சங்கரன்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் திருமலைக்குமார், திருவேங்கடம் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, மற்றும் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது கஸ்தூரி ரெங்கபுரம் கிராம நிர்வாக அதிகாரி இசக்கிமுத்து, அந்த பகுதியில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலையில் ஏராளமான பட்டாசுகளை அனுமதியில்லாமல் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் கஸ்தூரி ரங்க புரத்திலுள்ள ஒரு பழைய தீப்பெட்டி ஆலை குடோனுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மூட்டை மூட்டையாக விதவிதமான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ராக்கெட் வெடிகள், அலங்கார மத்தாப்புகள், வேறு வகையான வெடிகள் என்று ஏராளமாக இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த பட்டாசுகளை சிவகாசியை சேர்ந்த கெண்டல்சாமி, அவரது மகன் புருஷோத்தமன், விருதுநகரை சேர்ந்த சுப்புராஜ் ஆகிய 3 பேரும் பதுக்கி வைத்திரு்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடந்தையாக இருந்த குடோன் உரிமையாளர் நம்மாழ்வார், அருள்மணி, ஊழியர்கள் சேவு பாண்டியன், மாரிச்சாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் புருஷோத்தமன், நம்மாழ்வார் ஆகியோரை தவிர மற்ற 5 பேரையும் கைது செய்தனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications