பெண் குழந்தை தத்தெடுப்பு-'இந்து' சிக்கலை தீர்த்த கோர்ட்
மும்பை: இந்து சமயத்தில் பெண் குழந்தை வைத்திருப்பவர்கள் மற்றொரு பெண் குழந்தையை தத்தெடுப்பதில் இருக்கும் தடையை நீக்கி மும்பை உயர் நீதிமன்றம் புதிய தீர்ப்பளித்துள்ளது.
இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் படி பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்கள் பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது. அதேபோல் ஆண் குழந்தை வைத்திருப்பவர்கள் ஆண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.
இதை எதிர்த்து சமீபத்தில் உயர் மும்பையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத நடிகர் மற்றும் அவரது மனைவி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த தம்பதியருக்கு ஏற்கனவே 2 வயது குழந்தை ஒன்றுள்ளது. இந்நிலையில் அவர்கள் கடந்த 2005ல் ஒரு அனாதை சிறுமியை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தனர். ஆனால், அதற்கு சட்டம் குறுக்கே நி்ன்றதால் வழக்கு தொடுத்துள்ளனர்.
அவர்கள் இந்த குழந்தையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தங்களுக்கு தத்தெடுக்கும் உரிமை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தை கேட்டு கொண்டனர். இதன்மூலம் பல குழந்தைகளுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என அவர்களது வக்கீல் விஷால் கானடே வாதிட்டார்.
இதை விசாரித்த நீதிபதி சந்திரசூட் அளித்த தீர்ப்பில்,
இந்து குழந்தை தத்தெடுப்பு குறையில் இருக்கும் இந்த தடை நீக்கப்படுகிறது. இதன்மூலம் குழந்தை தத்தெடுப்பை உற்சாகப்படுத்த முடியம் என நம்புகிறோம். அனாதை குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்வு அமைய இது உதவும்.
பல தத்தெடுப்பு சட்டங்களை ஆலசி ஆராய்ந்த பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு, குழந்தைகள் உரிமை சட்டம் 1992 ஆகியவற்றையும் கணக்கில் எடுத்து கொண்டோம்.
தத்தெடுப்பு என்பது ஒரு குழந்தையின் வாழ்வுக்கான உரிமை. சுதந்திரம். ஒரு குழந்தையின் வாழ்க்கை என்பது மற்ற அனைத்தையும் விட அதிக முக்கியவத்துவம் வாய்ந்தது என்றார்.












Click it and Unblock the Notifications