For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவின் புதிய அணையால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோகும் - பழ. நெடுமாறன்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: கேரளா புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கான உரிமைகள் கிடைக்காது என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறினார்.

இது குறித்து மதுரையில், பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கேரளா புதிய அணை கட்ட சர்வே எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது, சுப்ரீம் கோர்ட் மூலம் பெற்ற உரிமைகளை சிறிதும் மதிக்காததையே காட்டுகிறது.

புதிய அணை கட்டும் திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை. ஆனால் கேரள முதல்வர் தலைமையில் அம் மாநில அனைத்து எம்.பி.- க்கள் பிரதமரிடம் ஆதரவு கேட்டனர்.

தமிழகம் சார்பில் நமது நியாயத்தை வலியுறுத்த எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. தமிழக மத்திய மந்திரிகள், நமது தரப்பு கருத்தை தெரிவிக்க தவறிவிட்டனர்.

புதிய அணை கட்டினால், ஏற்கனவே இரு மாநில அரசுகள் செய்து கொண்ட 999 ஆண்டு ஒப்பந்தம் செல்லாதாகிவிடும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X