விஐபி வீடுகள் பராமரிப்பு - 5 ஆண்டுகளில் ரூ. 100 கோடி செலவு
தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு அரசு அளித்துள்ள பதிலில் இது தெரிவிக்கப்பட்ுடள்ளது.
அமைச்சர்கள், எம்.பி்கள் உள்ளிட்ட விஐபிகளின் பங்களாக்களைப் பராமரிப்பது, வெள்ளை அடிப்பது, புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 93.50 கோடியை அரசு அள்ளி விட்டுள்ளதாம்.
மத்திய அரசின் பொதுப்பணித்துறை இந்தப் பணிகளை மேற்கொள்கிறதாம்.
டெல்லியில் அமைச்சர்களுக்கு 77 பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர எம்.பிக்களுக்கும் வீடு தரப்படுகிறது. அவர்கள் எம்.பியாக இருக்கும் வரை இங்கு ஓசியில் தங்கிக் கொள்ளலாம். தங்கும் வசதி இலவசம் என்றாலும் கூட ஒரு பங்களாவுக்கு ரூ. 105 உரிமக் கட்டணமாக ஒருமுறை மட்டும் வசூலிக்கப்படுகிறது.
கடந்த 2004-05ல் பராமரிப்புக் கட்டணத்தின் அளவு ரூ. 11 கோடியாக இருந்தது. 2005-06ல் இது ரூ. 9 கோடியாகவும், 2006-07ல் ரூ. 20 கோடியாகவும், அடுத்த ஆண்டு ரூ. 33 கோடியாகவும் இருந்தது.
இந்த ஆண்டு இதுவரை ரூ. 21 கோடியை செலவிட்டுள்ளதாம் பராமரிப்புப் பணிக்காக, மத்திய பொதுப்பணித்துறை.
இந்தியாவில் பொருளாதார மந்த நிலை என்று யார் சொன்னது?